முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்று வார்த்தைகளின் மூலம் மக்களை ஏமாற்றிய பா.ஜ.க தோல்வியடைந்து விட்டது - காங். மாநாட்டில் மன்மோகன் சிங் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வெற்று வார்த்தைகளின் மூலமே மக்களை ஏமாற்றி வந்த பா.ஜ.க அரசு தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் 2-வது நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

2-வது நாளான நேற்று மாநாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது பேசிய அவர்,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவின் ஆட்சியால் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.ஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பல சிறுதொழில் நிறுவனங்களை அழித்து விட்டது. காஷ்மீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை பா.ஜ.க மிகவும் மோசமாகக் கையாண்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பா.ஜ.க சீரழித்துள்ளது என்று மன்மோகன்சிங் பேசினார். மேலும் வெற்று வார்த்தைகளால் மட்டுமே மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வந்த பா.ஜ.க அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்திச் செல்ல காங்கிரஸ் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவர் தனது பேச்சில் எடுத்துரைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து