முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வேண்டும்: சசிதரூர்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது,

வடகிழக்கு மாநில மக்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதாக பொதுவான கருத்து நிலவுகிறது. ஆதலால், அந்த மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பான ஒவ்வொரு முடிவும், டெல்லியில்தான் எடுக்கப்படுகிறது என்பது அந்த மாநில மக்களுக்கு திருப்தியை அளிக்காது. ஆதலால், வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஜனநாயக நாடான இந்தியாவில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியும் என்று சசிதரூர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து