எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : குரங்கணி மலைக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரண்டு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், தேனி வனக் கோட்டம், கொட்டக்குடிகாப்புக் காட்டில் (குரங்கணி பகுதியில்) ஏற்பட்ட தீ நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பிரச்னை எழுப்பினர் அதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம் வருமாறு:-
11-ம் தேதி அன்று மதியம் 2.30 மணி வனக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் மூன்று சூழலியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீயினை அணைக்கும் பொருட்டு தீ நிகழ்வு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் இப்பகுதிக்கு மாலை 5 மணி அளவில் சென்றபோதுதான், மலையேற்றக் குழுவினர் தீயில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல், தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து செல்லும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் மேற்பார்வை
மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களைக் கோரியது. அரசு மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் 11-ம் தேதி இரவு முழுவதும் மேற்கொண்டது. எனது உத்தரவின் பேரில், 12-ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர், ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுக் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குரங்கணிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
நேரில் சந்தித்து ஆறுதல்
நானும், மதுரைக்கு சென்று, தீக்காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்டநிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்களில், 10 நபர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர். 17 நபர்களுக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டது. மீதம் 9 நபர்கள் சம்பவ இடத்தியேயே இறந்து விட்டனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
மேலும், காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு, தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்தகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசானகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்தும் வழங்க உத்தரவிட்டேன்.
தலா ரூ. 4 லட்சம்...
சிகிச்சையில் இருந்த மேலும் 7நபர்களும் இறந்துள்ளனர். இவர்களுக்கும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். விபத்து நடந்த பகுதியில், எண்ணெய் பதம் கொண்ட உயர்ந்து வளர்ந்த சுக்கு நாரி புற்கள் அதிகம் இருந்ததால், தீ மிகவும் விரைவாக பரவியுள்ளது. இக்குழுவினருக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, அவர்கள் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.
2 மாதத்தில் அறிக்கை...
டாப் ஸ்டேஷன்-ல் இருந்து குரங்கணிக்கு மலை ஏற்றம் செல்வதற்கு நுழைவுச் சீட்டு பெற்றிருந்தும், 12 நபர்கள் அங்கீகரிக்கப்படாத வேறு பாதையில் கொழுக்கு மலைக்கு செல்வது தொடர்பான தகவல் ஜெயசிங், வனவருக்கு கிடைக்கப் பெற்றது என்பது வனத் துறையின் முதற்கட்ட விசாரணையின்போது தெரிய வந்தது. அந்த வனவரும் விசாரணையின் போது இதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனவே, அவர் 12-ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை தடுக்கும்வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைமுதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாத காலங்களில் அவர் தனதுஅறிக்கையினை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.