முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் ரூ.10 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கைது

புதன்கிழமை, 21 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

வதோதரா, குஜராத் மாநிலத்தில் வதோதரா அருகே ரூ.10.03 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் வைத்திருந்த ஆட்டோ டிரைவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து வர்னாமா காவல்நிலைய ஆய்வாளர் எச்பி பார்மர் தெரிவித்தது:

ஆட்டோ டிரைவர் இட்ரிஸ் முகமது பதான் என்பவர்  500 புதிய ரூபாய் நோட்டுகள் 1652 எண்ணிக்கையிலும், 2000 ரூபாய் நோட்டுகள் 77 எண்ணிக்கையிலும் மற்றும் மீதமுள்ளவை 100 ரூபாய்த் தாள்களாகவும் கள்ளநோட்டுகளை வைத்திருந்தார்.

கேலன்பூர் ரயில்நிலையம் அருகே ஒரு கடையில்  ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயற்சிசெய்துகொண்டிருக்கும்போது பிடிபட்டார்.

இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து