முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீடு: கனிமொழி - ஆ.ராசாவுக்கு டெல்லி ஐகோர்ட்நோட்டீஸ்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு  வழக்கில், சி.பி.ஐ மேல்முறையீடு செய்ததையடுத்து, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி டெல்லி ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது.

17 பேர் மீது வழக்கு

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.30 ஆயிரத்து 984 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ குற்றச்சாட்டு கூறியது. இதன் அடிப்படையில் தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம்தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோதமாக...

இதைபோல ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கப்பிரிவு வழக்குத் தொடர்ந்தது. தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆ.ராசா, சாஹித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரீம் மோரானி, அமிர்தம், கலைஞர் தொலைக்காட்சிஇயக்குநர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

அனைவரும் விடுவிப்பு

இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடந்துவந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பவர்களுக்கு எதிரான சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்களை நிரூபிக்க சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு தவறிவிட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி சைனி விடுவித்தார்.

நோட்டீஸ் அனுப்ப...

இந்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்தது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. கார்க் முன்னிலையில் சிபிஐ மனு நேற்று விசாரணைக்கு வந்தநிலையில், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார். இந்தவழக்கை வரும் மே 25-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கால அவகாசம்...

சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''2ஜி ஸ்பெக்ட்ரம்  வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு ஜனவரி 15-ம் தேதிதான் கிடைத்தது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏப்ரல் 15-ம் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், இந்த முறையீடு செய்துள்ளோம்'' எனத் தெரிவித்தனர். முன்னதாக இந்த வழக்கில் கடந்த 3 தினங்களுக்கு முன் அமலாக்கத்துறையும் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து