முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ : டெல்லியில் வரும் 26-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

டெல்லியில் வரும் 26ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் 30ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு பி சிங் கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் ... காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைத்திட உச்சநீதிமன்றம் உத்திர விட்டு 4 வாரங்கள் முடிவடைந்த நிலையில், மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு பி சிங் அமைக்க வாய்ப்பில்லை என 2 வாரங்களுக்கு முன்பாகவே ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்திருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இச் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் தனது நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணான கருத்தை நிர்வாக ரீதியில் நீதிமன்றத்தில் மட்டுமே தெரிவிக்க முடியும் அதனை மீறி வெளியில் தெரிவித்த தின் மூலம் அரசு ஊழியரின் நன்னடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். கர்நாடகாவிற்கு அரசியல் லாப நோக்கோடு பிரதமர் மோடி செயல்படுவதற்கு யு.பி.சிங் துணை போகிறார். இதனால் மேலாண்மை வாரியம் அமைக்கப் போவதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனவே தமிழக அரசு 30ந் தேதி வரை கால தாமதம் செய்யாமல் யு.பி சிங் கருத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதியிடம் எழுத்துப் பூர்வ புகார் அளித்து உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். கால தாமதப்படுத்துவது தமிழக நலனுக்கு பாதகமாக அமைந்துவிடும். தமிழக அரசு காலம் கடத்தும் பட்சத்தில் வாய்பிருக்குமேயானால் நாங்களே புகார் அளிப்போம். டெல்லி பாராளுமன்றம் முன் வரும் 26ம் தேதி முதல் துவங்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் யு.பி சிங் நடவடிக்கையை அம்பலப்படுத்துவோம் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்துவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் 4 மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து மற்ற மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் ஒத்தக் கருத்தோடு இருப்பதை நாங்கள் நேரில் சந்தித்து உறுதிப்படுத்தி படுத்தியுள்ளோம். எனவே கூட்டாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பெரும்பான்மை கருத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக ஒப்புதலும் பெற்றுள்ளோம். இந்நடவடிக்கையை அலட்சியப்படுத்தாமல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழச்சாமி அவர்கள் உரிய நடவடிக்கை மேற்க்கொண்டு விரைவில் பிரதமர் - முதல்வர்கள் சந்திப்பிற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்றார்.. மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து