எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் முதல்வர் ஆவேசமாக பேசினார்.
விளக்க கூட்டம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஓராண்டு பூர்த்தியானதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சி...
முன்னதாக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் முதல்வர் பழனிசாமி சுற்றிப் பார்த்தார். அமைச்சர்களும் கண்காட்சியை சுற்றிப் பார்த்தனர். அதை தொடர்ந்து சாதனை மலரை முதல்வர் வெளியிட அதை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்களும் வரிசையாக சாதனை மலரை பெற்றுக் கொண்டனர். பின்னர் நடந்த விழா கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
ஒற்றுமையுடன்..
மக்கள் நலத்திட்டங்களால் ஜெயலலிதா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்பார் என்று பேசிய முதல்வர், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்றும், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் விரைவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் பெற்ற திட்டங்களையும் முதல்வர் பட்டியலிட்டு பேசினார். கட்சியில் படிப்படியாக வளர்ந்து முதலமைச்சராகி உள்ளேன் என்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அ.தி.மு.க அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக பேசினார். பின்னர் அவர் அரசின் திட்டங்களை குறிப்பிட்டார். அதன் விபரம் வருமாறு,
முதன்மை மாநிலமாக...
தமிழகம் முழுவதும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். 30 மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உழைக்கும் மகளிருக்காக இரு சக்கர வாகனத்தை வழங்கிய அரசு அ.தி.மு.க அரசுதான். மேலும் வறட்சிக்காக நிவாரணம் வழங்கி ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான். பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. ஓகி புயலின் போது காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. உயர் கல்வியில் தமிழகமே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான். இவ்வாறு தூர்வாரப்படுவதால் 15 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை அளித்ததும் அ.தி.மு.க. அரசுதான். அனைவருக்கும் வீடு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வலியுறுத்துவோம்...
நாங்கள் இதையெல்லாம் தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தவில்லை. காரணம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கொண்ட அம்மா வழியில் வந்தவர்கள் நாங்கள். அதனால்தான் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துகிறோம். மீனவர்கள் மீது தனி அக்கறை கொண்டது இந்த அரசு. இலங்கை சிறையில் மட்டுமல்ல, ஈரான் சிறையில் இருந்த மீனவர்களையும் விடுவித்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தமிழக அரசை விமர்சித்து சிலர் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்று நம்புகிறோம். ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்காக ரூ. 10 கோடி வழங்கியது அ.தி.மு.க. அரசுதான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார். அப்போது தடைகளை கடந்து சாதனை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று புகழாரம் சூட்டினார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.