முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்லாமில் எதையும் சந்திக்க இந்தியாதயார்: நிர்மலா சீதாராமன் சவால்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

டேராடூன் : •டோக்லாமில் எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சிக்கிம் மாநிலம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகேயுள்ள டோக்லாம் பகுதி, யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை உள்ளது. கடந்தாண்டு துவக்கத்தில், இப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது.

தகவல் அறிந்ததும், நம் வீரர்கள் சென்று, அப்பணியை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பு வீரர்களும், அங்கு, 72 நாட்களாக முகாமிட்டு இருந்தனர். இரு தரப்பு உயரதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், இரு நாடுகளின் வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர். ஆனால், இந்த பகுதியை சீனா மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், உத்தர்காண்ட் மாநிலம், டேராடூனில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், டோக்லாமில் எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இந்திய ராணுவத்தை நவீனபடுத்தும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. நமது பிராந்திய ஒருமைப்பாட்டை தொடர்ந்து காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து