முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத் துறை நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி அடுத்த மாதம் சந்திப்பு

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, புதிய இந்தியா திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில், இந்தியன் ஆயில் காப்பரேஷன், கெயில் இந்தியா லிமிடெட், தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள், தங்கள் நிறுவனங்களின் நிதி மேலாண்மை, நிர்வாகம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிப்பார்கள். அவற்றை புதிய இந்தியாவை உருவாக்குவதில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அவர்கள் யோசனை தெரிவிப்பார்கள். கூட்டத்தில் முடிவில், புதிய இந்தியா-2022 என்ற இலக்கை எட்டுவதற்கு, பொதுத் துறை நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய பங்குகள் குறித்து வரைவுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று பொதுத் துறை நிறுவனங்கள் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து