முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைய சனீஸ்வர பகவானை வேண்டினேன்: சரத்குமார்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

காரைக்கால்: காவிரி மேலாண்மை வாரியம் அமைய திருநள்ளாறு சனீஸ்வர பகவான் மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில்களில் வேண்டிக்கொண்டதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டி காரைக்கால் அம்மையார் கோவிலிலும், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலிலும் வேண்டிக் கொண்டேன்.
- சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று காரைக்கால் வந்தார். அங்கு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்டா பகுதி விவசாயிகள் காவிரி நீரையே நம்பி இருக்கிறார்கள். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்தார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டி காரைக்கால் அம்மையார் கோவிலிலும், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலிலும் வேண்டிக் கொண்டதாக சரத்குமார் தெரிவித்தார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து