முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      கடலூர்
Image Unavailable

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்  தம்பிக்குநல்லான் பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  இன்று நடைப்பெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்  கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பள்ளி ஆண்டு விழா

விழாவிற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்  கந்தசாமி, வட்டார வள மைய அசிரியர் பயிற்றுனர் தனவேல், மு.ஒன்றிய  பெருந்தலைவர் அசோகன், மு.ஒன்றிய துணைத் தலைவர் ராசாங்கம், சிதம்பரம் நகர  மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், புவனகிரி காவல் உதவி  ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்  லூர்துமேரி செல்லம்மாள் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்  கலந்து கொண்டு பள்ளியில் நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருட்களையும் சான்றிதழ்களையும் வழங்கி  சிறப்பித்தார். விழாவில் நிர்வாகிகள் ரெங்கம்மாள், வீராசாமி, ஆறுமுகம், ஆசிரியர்  செல்வரங்கம், செளந்தர்ராஜன், ராமசந்திரன், கோதண்டம், ஏ.கே.ராஜெந்திரன், குமார், தர்மலிங்கம், மாரியப்பன், ஜவகர், செல்வரங்கம், பொன்னுரங்கம், தேசிய நல்லாசிரியர் ஏகாம்பரம், பள்ளி ஆசிரியர்கள் மீனா, பிரேமாவதி, நந்தினி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆசிரியை விக்டோரி ஞானசெளந்தரி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து