முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: ஐ. நா. விசாரணையை நிராகரித்தது இஸ்ரேல்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

டெல்அவிவ், காசா - இஸ்ரேல் எல்லையில் நடந்த போராட்டத்தில் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ. நா விடுத்த விசாரணை அழைப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

காசா - இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் - காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர்.

அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின் பேரணி வன்முறையாக மாறியது. இதில் 16 பாலஸ்தீனர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்தச் செயலை பாலஸ்தீன அரசு கடுமையாக கண்டித்தது. பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ், "பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று ஐ.நா.சபையை வலியுறுத்தினர்.  இந்த நிலையில் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ. நா. விடுத்த நிதி விசாரணை அழைப்பை இஸ்ரேல் நிராக்கரித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அவிங்டர் லிபர்மேன் கூறியபோது, "எந்த விசாரணையும் இல்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தார்கள். எங்களுடைய படை வீரர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றுப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து