முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் பேருந்து விபத்து: 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

குவைத், குவைத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட எண்ணெய் கிணறுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு குவைத் நகரில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று எண்ணெய் நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த பேருந்தும், இந்தப் பேருந்தும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில், 7 இந்தியர்களும், 5 எகிப்தியர்களும், 3 பாகிஸ்தானியர்களும் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், விபத்துக்குள்ளான பேருந்துகளில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து