முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் முடிவுகளை வாக்குச் சாவடிகள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்கள் அல்ல: பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கருத்து

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அரசியல் முடிவுகளை வாக்குச் சாவடிகள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: அரசியல் முடிவுகள் வாக்குச் சாவடிகளில்தான் எடுக்கப்பட வேண்டும். வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதன் மூலம் அதனை செய்து முடிப்பர். மாறாக அதுபோன்ற முடிவுகளை நீதிமன்றங்கள் மேற்கொள்ளக் கூடாது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஆசிப் அலி சர்தாரி அதிபரானார். அவர் பாகிஸ்தானுக்கு செய்த நல்ல காரியம் என்ன என்பதை நாடே அறியும். அதனால்தான், 2013-ஆம் ஆண்டு மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது மக்களின் முடிவு. அதன்பிறகு, நவாஸ் ஷெரீஃபை தேர்ந்தெடுத்த மக்கள் அதன் மூலம் எண்ணற்ற முன்னேற்றங்களை கண்டுள்ளனர். எனவேதான், அரசியல் முடிவுகளை வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்குச்சீட்டுகள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, நீதிமன்றங்கள் மூலமாக அல்ல என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து