முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      கடலூர்
Image Unavailable

 கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு   நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா  தலைமையில்   நடைபெற்றது. 

குறைதீர் கூட்டம்

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்தனர்.மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 353 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,000- மதிப்பீட்டிலான பார்வையற்றோருக்கான நவீன மடக்கு குச்சியினையும், 1 பயனாளிக்கு வங்கி கடன் மானியம் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா  வழங்கினார்.இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் கூஷ்ணாதேவி (ச.பா.தி), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆ.சண்முகசுந்தரம், தாட்கோ மாவட்ட மேலாளர் இராஜலட்சுமி, துணை ஆட்சியர் (பயிற்சி) வி.பி.ஜெகதீஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து