முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களின் ஆசையை லாபமாக்குகிறதா ஐ .பி. எல்? டிக்கெட் விலை குறித்த புகார்களுக்கு எஸ்.கே விளக்கம்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். அணி சார்பில், சென்னையில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று முதல் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என்று தெரிகிறது.

எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களை விடவும் சென்னையில் ஐ.பி.எல். டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் தளத்தில், அடுத்தவன் ஆசைய எப்படி பணம் ஆக்கி லாபம் பண்றது? இவுங்கல பாத்து கத்துகிடனும்  என்று ஒரு ரசிகர் டுவீட் செய்திருந்தார். வழக்கமாக, இதுபோன்ற ரசிகர்களின் புகார் டுவீட்கள் கண்டுகொள்ளாமல் விடப்படும். ஆனால் ஆச்சர்யப்படும் விதத்தில் சி.எஸ்.கே நிர்வாகம் இந்தப் புகாருக்கு டுவிட்டர் வழியாகப் பதில் அளித்துள்ளது.
இதற்காக வருந்துகிறோம். ஜி.எஸ்.டி. உள்ளூர் வரியுடன் சேர்த்து வசூலிப்பதால் கட்டணம் அதிகமாக உள்ளது. மற்ற ஐ.பி.எல் மையங்கள் ஜி.எஸ்.டி மட்டும்தான் வசூலிக்கிறது. இங்கு நாங்கள் உள்ளூர் வரியையும் செலுத்தவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது. எதன் அடிப்படையில் ரூ. 1300 என்கிற மற்றொரு கேள்விக்கு சி.எஸ்.கே.வின் பதில்: அடிப்படை விலை -ரூ. 762 + உள்ளூர் கேளிக்கை வரி ரூ. 254 + ஜிஎஸ்டி ரூ. 284 = ரூ. 1300. ஆகமொத்தம் ஆகும்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து