முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தமிழக கவர்னருடன் தம்பிதுரை மரியாதை நிமித்த சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் நேற்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் அதனால் எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலவரங்கள் பற்றியும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோருடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

அதை தொடர்ந்து கவர்னர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் அலுவலகத்தில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கவர்னர் பன்வாரிலால் சந்தித்து பேசினார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள கவர்னரை தற்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து