முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக 3 துறைகள் ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக 3 துறைகளை கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய தரைவழி மற்றும் கடல்வழி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். இதனையடுத்து 2017 முதல் நிதித்துறை மற்றும் கப்பல்துறையின் இணை அமைச்சராக இருந்து வருகிறார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கூடுதலாக துறைகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி செலவினங்கள், பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் சொத்து ஆவணங்கள் துறை பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து