முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.சி. எஸ்.டி. சட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த சுப்ரீம் கோர்ட் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விடும் என்று மத்திய அரசினை எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் அறிவித்தார்.

அதன்படி எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான சீராய்வு மனு மீதான விசாரணையின் போது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
முன்னதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோயல் மற்றும் பாலி நாரிமன் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு பற்றி முறையிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சீராய்வு மனுவினை நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தீர்ப்பின் காரணமாக நாடு முழுவதும் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதனைச் சுட்டிக் காட்டி, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் நாங்கள் அளித்த தீர்ப்பினை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அனைவரும் வீதிக்கு வந்து போராடுகின்றனர். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலமாக அப்பாவிகள் சிலரும் பாதிக்கப்படுகின்றனர். அதனைத் தடுப்பதற்காகவே விசாரணை கமிஷன் ஒன்றினை அமைக்க உத்தரவிட்டுளோம். அந்த கமிஷனின் விசாரணை முடிவில் புகார் அளிக்கப்பட்டவர் மீது தவறு இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டதோடு, வழக்கை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர். அத்துடன் மூல வழக்கில் சம்மந்தப்பட்ட எதிர் தரப்பினர் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து