முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள இளைஞர் குடும்பத்துக்கு சேவாக் நிதியுதவி

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மது என்ற வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டது தவறான குற்றச்சாட்டு என்று தெரிய வந்ததால் கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் பினராயி விஜயன் இதற்கு வருத்தம் தெரிவித்ததுடன் அரசு அதிகாரிகளுடன் மதுவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இச்சம்பவம் பல்வேறு பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 16 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கிரி்க்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அதற்கான காசோலையை தன்னார்வலர் ஒருவர் மூலம் இளைஞரின் குடும்பத்தி்னருக்கு வரும் 11-ம் தேதி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து