முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரையூர் தாலுகா சந்தையூரில் இருந்த சர்ச்சைக்குரிய சுவர் இடிப்பு: மதுரை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பேரையூர் தாலுகா சந்தையூர் கிராமத்திலிருந்த சர்ச்சைக்குரிய சுவர் அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டது.
திருமங்கலம் தொகுதி பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சந்தையூர் கிராமத்தில் இருபிரிவைச் சேர்ந்த சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு பாதையை மறித்து சுவர் எழுப்பினர்.இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரித்து சர்ச்சைக்குரிய அந்த சுவரை அகற்றிட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.அதே சமயம் சுவற்றினை அகற்றிட அதனை கட்டிய பிரிவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் சுவற்றினை அகற்றிட வலியுறுத்தி 60நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்திய தரப்பினைச் சேர்ந்த பழனிமுருகன்(29)என்பவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.இதiனிடையே பழனிமுருகன் தரப்பினைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய சுவற்றினை அகற்றினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்றனர்.இதனால் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பழனிமுருகனின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக சர்ச்சைக்குரிய சுவற்றின் ஒருபகுதி அகற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பழனிமுருகனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சந்தையூரில் உள்ள சர்ச்சைக்குரிய சுவற்றினை இடித்திட உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,பேரையூர் தாசில்தார் உதயசங்கர்,டி.எஸ்.பி.க்கள் ராமகிருஷ்ணன்,பரமசிவம் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவற்றின் நடுப்பகுதியை உடைத்து வழி ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அப்போது சுவற்றினை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள்.அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் சந்தையூரில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சுவற்றின் நடுப்பகுதி துளையிடும் இயந்திரம் உதவியுடன் இடிக்கப்பட்டு பொதுமக்கள் சென்றிட வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.இருப்பினும் பாதுகாப்பு கருதி சந்தையூர் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து