முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே கிணற்றில் மிதந்த காதல்ஜோடிகள்..

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

  நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை சாலையில் உள்ள பாப்பாபட்டி விளக்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான வட்டகிணற்றில் தண்ணீரில் நேற்று கிணற்றில் இரண்டு பிணங்கள் மிதப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது. அதன்பேரில் போலீசார் நத்தம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள்  அதற்கான நைலான்கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினர். தொடர்ந்து உள்ள கிடந்த பிரேதங்களை கைப்பற்றி கரைசேர்த்தனர். தகவலிறிந்த நத்தம் பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து யார் என்று தெரியாமல்  புலம்பிக்கொண்டிருந்தனர்.
 அபபோது கூட்டத்திலிருந்த சிலர் அடையாளம் தெரிவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் விசாரித்ததில் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்த ராஜதுரை(வயது19),கர்ணன் தெருவைச்சேர்ந்த நாகேஸ்வரி(வயது14), 9&ம் வகுப்பு படித்துவருகிறார் என்பது தெரியவந்தது.இவர்கள்  இருவரும் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில் நத்தம் அருகே கிணற்றில் இருவரும் ஒன்றாக கயிறுகட்டி குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இறந்தவர்களின் பிரேதங்களை போலீசார் கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு  அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்திவருகிறார்.முன்னதாக இறந்தவர்களின் பிரேதங்களை நத்தம் அரசு மருத்துமனையில் மறுநாள் பரிசோதனை செய்துதருவதாக கூறினர். இன்றே(நேற்றே) பிரேதபரிசோதனை செய்யவேண்டும் என்று நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் நேரில் சென்று மருத்துவர்களிடம் பரிந்துறை செய்யததின் பேரில் இருவருடைய உடல்களும் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து