முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு தண்டனை பார்க் கியூன் சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

சியோல்: ஊழல் புகாரில் சிக்கிய தென் கொரிய முன்னாள் பெண் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன் ஹை கடந்த 2013-ம் ஆண்டு(66) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென் கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் சங் ஹீயின் மகள். மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பார்க், அதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பல ஊழல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக அரசு கொள்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பார்க் கியூன் ஹைக்கு உடந்தையாக அவருடைய நெருங்கிய தோழி சோய் சூன் சில் என்பவர் செயல்பட்டுள்ளார். இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே தோழிகளாக இருந்துள்ளனர்.

பார்க் சங் ஹீ சர்வாதிகார ஆட்சி நடத்திய போது அவருடைய குருவாக விளங்கியவரின் மகள்தான் சோய். தென் கொரிய அரசில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சோய், உயர் மட்ட பணி நியமனங்களில் தலையிட்டுள்ளார். அரசு சார்பான அதிபரின் உரைகளை இவர்தான் எடிட்டிங் செய்துள்ளார். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளார். இவருடைய தலையீடு மற்றும் அதிபர் கியூனுடனான உறவு ஆகியவை குறித்து மக்கள் காரசாரமாக விமர்சிக்க தொடங்கினர்.

இதையடுத்து மக்கள் இருவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்த தொடங்கினர். தலைநகர் சியோல் உட்பட நாடு முழுவதும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் பெரிதானதால் அதிபர் பதவியில் இருந்து பார்க் நீக்கப்பட்டார். பார்க் மற்றும் சோய் மீது ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், எல்லா குற்றச்சாட்டு களையும் பார்க் திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கிடையில், சோய் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டது. அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

இந்நிலையில், முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹை மீதான வழக்கு கடந்த 10 மாதங்களாக நடந்து வந்தது. பல நாட்கள் நீதிமன்ற விசாரணையை பார்க் புறக்கணித்தார். எனினும் தொடர்ந்து நடந்த விசாரணையில் பார்க் கியூன் ஹை மீதான ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து பார்க் கியூன் ஹைக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கிம் சே-யூன் நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன் 18 பில்லியன் தென் கொரிய கரன்சி ‘ஒன்’ அபராதமாக விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியான போது நீதிமன்றத்தில் பார்க் கியூன் ஆஜராகவில்லை. ஆனால், தீர்ப்பு விவரம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தீர்ப்பு வெளியானதை அடுத்து பார்க் கியூன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து