முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நேபாளம் இடையே புதிய ரயில் பாதை : இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  இந்தியா - நேபாளம் இடையே புதிய ரயில் வழித்தடம் ஒன்றை அமைப்பதற்கு இரு நாடுகளும் இசைவு தெரிவித்துள்ளன. அதன்படி பிகாரின் ரக்செளல் பகுதியில் இருந்து காத்மாண்டு வரை இருப்புப் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சந்தித்துப் பேசிய பிறகு இதுதொடர்பான ஒப்புதலை இரு தலைவர்களும் கூட்டாகத் தெரிவித்தனர். திபெத் - காத்மாண்டு இடையேயான ரயில் பாதைத் திட்டத்தை சீனா முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது அதற்கு பதில் நடவடிக்கையாக இத்தகைய திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள பிரதமர் சர்மா ஒலி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி. ஒலி, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு வருவது இதுவே முதன்முறையாகும். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், முன்னதாக, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து பேசினார். டெல்லியில் அமைந்துள்ள ஐதராபாத் இல்லத்துக்கு நேற்று முன்தினம் வந்த அவர், பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்தியா - நேபாளம் இடையே பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களையும், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியையும் அப்போது இரு தலைவர்களும் திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் தலைவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்புத் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குதல், வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், விவசாயத் துறையில் ஒருங்கிணைந்த திட்டங்களை வகுத்தல் ஆகியவை அவற்றில் பிரதானமாக இருந்தன.
அதுமட்டுமன்றி, இந்திய - நேபாள நல்லுறவை மீண்டும் புதுப்பிப்பது குறித்தும் இருவரும் விரிவாக பேச்சு நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்திப்பின் முக்கிய நிகழ்வாக, நீண்ட காலமாக பரிசீலனையில் இருந்த புதிய ரயில் வழித்தடத் திட்டத்துக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். அதே போன்று, இந்தியா - நேபாளம் இடையே ஏற்கெனவே அமைக்கப்பட்டு வரும் இரு வேறு ரயில் திட்டங்களும் (ஜெயாநகர் - ஜனக்பூர், ஜோக்பானி - வீரத்நகர்) நிகழாண்டுக்குள் நிறைவடையும் என்று அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

இத்தகைய திட்டங்கள் மூலம் இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து