முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிப்பட்டி அருகே வேன் மீது பஸ்மோதல் 2 பேர்பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

வாடிப்பட்டி- வாடிப்பட்டி அருகே கார் மீது அரசுபஸ் மோதிய விபத்தில் 2பேர் பலியானார்கள் 8பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்துர் கண்ணப்பநகர் கவுண்டம் பாளையத்தை  சேர்ந்தவர்சரவணன்(வயது48). இவரது மனைவி சரண்யா,28. இவர்களது மகன்ஹரீஷ்,15, மகள்கள்  ஹரினி,10, சூர்யாஸ்ரீ,6. மற்றும் உறவினர்கள் வசந்தா 30, கங்கா 68, பூபதி 30, தியானத் 13, சானியா 8 உள்பட  14 பேர் நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்துகோவில்பட்டிக்கு குலதெய்வ கோயிலுக்கு வேனில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல்கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் வந்தது அதை டிரைவர் பூபதி என்பவர் ஓட்டிவந்தார். இந்நிலையில்   வாடிப்பட்டி அருகே  தாதம்பட்டி கண்மாய் பகுதியில் திண்டுக்கல் மதுரை தேசியநெடுஞ்சாலையில்  நேற்று அதிகாலை  2.45 மணிக்கு திடீர் என்று எதிர்பாராதவிதமாக வேனின் பின்புறம் அரசுபஸ்மோதியது.  இதில், வேன்நிலைதடுமாறிய தாருமாறாகஓடி எதிர்புற சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவஇடத்திலேயே தியானத்(13), சானியா(8) இருவரும் இறந்தனர்.  இதில்சரவணன், சரண்யா, ஹரீஷ், ஹரினி, சூர்யாஸ்ரீ, வசந்தா, கங்கா, பூபதி,   8 பேர் படுகாயமடைந்தனர் தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பாண்டியன், விஜயராம் மற்றும் போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். சமயநல்லூர் போலீஸ்துணைசூப்பிரண்டு மோகன்குமார் விபத்து நடந்த இடத்தை  நேரில் பார்வையிட்டு விசாரணைசெய்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து