முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிப்பட்டி தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் துணை தலைவர் பதவி ஏற்பு விழா

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -வத்தலக்குண்டில் ஏ.2948 குளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் துணை தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அவர்களை நிர்வாகிகள் நேரில் வாழ்த்தினர்.
திண்டுக்கல் மாவட்;டம் வத்தலக்குண்டு ஒன்றியம் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் ஆகியோர் ஆசியுடன் நடைபெற்ற ஏ.2948 குளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிச்சை தலைவராகவும்,  கீதா  துணை தலைவராகவும், முத்துகாமு, நாகராஜன், தமியான், முத்துமாரி, அமுதா, செல்வபெருமாள், முத்துச்சாமி, ராஜ்முத்து, கழுவன ஆகியோருக்கு செயலாளர்  முத்துப்பாண்டி  பதவி பிரமானம் செய்து வைத்தார். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன், முன்னாள் யூனியன் பெருந்தலைவர் மோகன், நகர செயலாளர் பீர்முகமது,  முன்னாள்; கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், துணை தலைவர் வெங்கடேஷ், சேவுகம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சதீஷ்குமார், மீனவரணி முருகேசன், கோம்பைபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மரியலூயிஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள். முடிவில்  வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தலைவர் துணை தலைவர் நிர்வாகிகள் சார்பாக பிச்சை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து