முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு படியேறி வந்த பசு! பெருமாள் பக்தர்கள் வியப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

திருமலை: திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு பசு மாடு திருமலைக்கு நடைபாதை வழியாக படியேறி வந்தது பக்தர்களிடையே வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

திருமலைக்கு நடைபாதை வழியாக இதுவரை பக்தர்கள் மட்டுமே நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு பசு மாடு மலை அடிவாரப் பகுதியில் உள்ள அலிபிரியில் இருந்து நடைபாதை வழியாக நடந்து படியேறியது.

ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த சனிக்கிழமை அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. நடைபாதை வழியாக வந்த பக்தர்கள் பசு ஒன்று அதே வழியாக வருவதை கண்டு வியப்படைந்தனர். நடந்து செல்லும் பக்தர்களுக்கு அது ஊறு விளைக்கும் என்று நினைத்து அதை விரட்டினர். எனினும், அந்த மாடு விலகிச் செல்லாமல் நடைபாதையில் தொடர்ந்து மேலே ஏறியது.

அது உடன் வந்த பக்தர்களுக்கும் எவ்வித தீங்கும் விளைக்கவில்லை. இதைக் கண்ட பக்தர்கள் அவ்வாசாரிகோணே பகுதியில் உள்ள கண்காணிப்பு ஊழியர்களிடம் இது தொடர்பாக தகவல் அளித்தனர். கண்காணிப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, அந்தப் பசுவைப் பாதுகாப்பாக நடைபாதை வழியாக அழைத்து வந்து திருமலையில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து