முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் பெட்டிகள் வடிவில் வகுப்பறைகள் ராஜஸ்தான் பள்ளி மாணவர்கள் குதூகலம்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், ஆல்வார் நகர அரசுப்பள்ளியில் மாணவர்களைக் கவரும் வகையில் வகுப்பறைகளை ரயில், இஞ்சின், ரயில்பெட்டிகள் போன்று மாற்றி வண்ணம் பூசப்பட்டுள்ளதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளி செல்கின்றனர்.

ஆல்வார் நகரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தை தற்போது அனைவரும், ரயில்வே பள்ளிக்கூடம் என்று அழைக்கிறார்கள். ரயில்பெட்டிகள் போன்று வரையப்பட்டு இருக்கும் வகுப்புகளுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருகிறார்கள். வகுப்பறைகளையும், பள்ளிக்கூடத்தையும் ரயில்நிலையம் போல மாற்றி, அதற்குரிய படங்களையும், வண்ணங்களையும் தீட்டியதே மாணவர்கள் சீரிய வருகைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
 
வகுப்பறைகள் ரயில் பெட்டிகளைப் போலவும், பள்ளியின் முகப்பு ரயில் எஞ்சின் போலவும், வகுப்பறை வராண்டா (நடைபாதை) ரயில் நிலை நடைமேடை போன்று மாற்றப்பட்டுள்ளது மாணவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இது குறித்து பள்ளியின் முதல்வர் புருஷோத்தம் குப்தா கூறுகையில், இந்த பள்ளிக்கூடத்தை ரயில்நிலையம் போல் மாற்றியுள்ளோம். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து