முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுககூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்துவதால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் சித்திரை பெருவிழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும், தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சில இடங்களில் நடைபெறும் லட்சதீப திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து