முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் தாக்குதல்: 2 இந்திய வீரர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

வீரமரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சுந்தர்பணி பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.  இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சுந்தர்பணி பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைரியமான...
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு செய்தி தொடர்பாளர்  கூறுகையில், ’வினோத் சிங் மற்றும் ஜாக்கி ஷர்மா ஆகியோர் தைரியமானவர்கள் மற்றும் உண்மையான வீரர்கள், நாடு எப்போதும் இவர்களின் தியாகம் மற்றும் கடமைகளுக்கு இதயபூர்வமாக கடன்பட்டிருக்கும்’ என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து