முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வடக்குத்தொகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு வி.வி .ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை -   மதுரை வடக்குத்தொகுதியில் நீர் மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்.
  கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நீர் மோh. பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கி தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது அதனையொட்டி மதுரை வடக்குதொகுதியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நீர் மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணிப்பழம், வெள்ளரிக்காய், ஆகியவற்றை மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், மதுரை வடக்குத்ததொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள், அண்ணாநகர் முருகன், கே.ஜெயவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே.முருகேசன், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார். வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வட்ட கழக செயலாளர்கள் கே.எம்.கண்ணன், கார்த்திக்முனியசாமி, ஒச்சாத்தேவர், மானகிரி மூர்த்தி, போஸ், காஜா, ஜெயராஜ், தங்கப்பாண்டி, மகேஷ்வரன், ஆறுமுகம், வெங்கடாசலம், ராமன், மகாதேவன், வீரணன், விணுவர்தர்ன் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது
   புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா அதனால் தான் கோடை கால வெயிலிருந்து மக்களின் தாகத்தை போக்க தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து தாகத்தை போக்கி வந்தார் தற்போது அம்மாவின் ஆத்மா வழியில் செயல்பட்டு வரும் இந்த புனித இயக்கம் தற்போது தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களின் தாகத்தை போக்கி வருகிறது
  தற்போது காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை காக்க இந்த அரசு போராடி வருகிறது ஆனால் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த தி.மு.க. தற்போது காவிரி பற்றி அக்கறை கொண்டது போல் அறிக்கை விடுவது மிகவும் காமெடியாக உள்ளது நிச்சயம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்குரிய உரிமையை பெற்றுத்தருவார்கள் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து