எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஙிங்: பெற்றோர் கார் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஷென் ஜீ, லியு ஜி. இருவருக்கும். கடந்த 2011-ம் ஆண்டு ஆண்டு திருமணமானது. இவர்கள் இருவரும் தங்களின் உயிரணுக்களை நங்ஜியான் நகரில் உள்ள டிரங்க் மருத்துவமனையில் பாதுகாக்க வைத்திருந்தனர். இருவரின் உயிரணுக்களும், லியுவின் கருமுட்டைகளும் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஆண்டு ஷென் ஜீ, லியு ஜி ஆகிய இருவரும் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே லியு ஜி உயிரிழந்தார். மருத்துவமனையில் 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஷென் ஜீயும் மரணமடைந்தார்.
இதனால், ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் வயதான பெற்றோருக்கு அடுத்து ஆதரவில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று தங்கள் பிள்ளைகளின் உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் ஷென் ஜீ, லியு ஜி பெற்றோர் கோரினார்கள். ஆனால், அவர்களிடம் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து வயதான பெற்றோர் இருவரும் நீதிமன்றத்தை நாடினர். பலஆண்டுகளாக பலவிதமான சட்டப்போராட்டங்களை நடத்தினார்கள். தங்களின் பிள்ளைகளின் கருமுட்டைகள், உயிரணுக்களும் தங்களுக்கே சொந்தம் அதை எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதன் மூலம் எங்களின் வம்சத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறோம் என்று நீதிமன்றத்தில் வயதான பெற்றோர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உயிரணுக்களை, கருமுட்டைகளை வழங்க அனுமதியில்லை.
ஆனால், இந்த வழக்கை அரிதினும் அரிதாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பின் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் உயிரணுக்களையும், லியுவின் கருமுட்டைகளையும் வயதான பெற்றோர் வசம் ஒப்படைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
மருத்துவமனை நிர்வாகமோ தான் நேரடியாக கருமுட்டைகளையும், உயிரணுக்களையும் ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் பெற்றோர்களுக்கு தர இயலாது இந்த கருமுட்டைகளை எந்த மருத்துவமனையில் வளர்க்க விரும்புகிறார்களோ அந்த மருத்துவமனையின் பொறுப்பில்தான் தரமுடியும் என்று கூறிவிட்டது.
ஆனால், சீனாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் வாடகைத்தாய் மூலம் இந்த கருமுட்டைகளை வளர்க்க ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்களால் இயலவில்லை.
இதையடுத்து, உயிரிணுக்களையும், லியுவின் கருமுட்டைகளை, லாவோஸ் நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்கள் கொண்டு வந்தனர். அங்குள்ள ஒரு மருத்துமனையில் லியுவின் கருமுட்டைகள் வளர்க்கப்பட்டு, 27 வயதுடைய ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்க்கப்பட்டது.
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின், 2017-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி வாடகைத்தாய் மூலம் குவாங்ஜூ மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏறக்குறைய ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனபின் கடந்த மாதம் அதற்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. அந்த குழந்தைக்கு ‘டையன்டியன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. டையன்டியன் என்றால் ‘இனிப்பு’ என்று அர்த்தம்.
இந்த டையன்டியன் பிறந்தது குறித்து மறைந்த லியுவின் தாயார் ஹூ ஜின்ஜியன் கூறுகையில், ''என் பேரனைப் பார்க்கும் போது எனது மகளைப் பார்க்கும் ஞாபகம் வருகிறது. என் மகளின் கண்களைப் போன்று கண்கள், முகம், நிறம் என அனைத்தும் என் மகள் லியு போன்று இருக்கிறது'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்.
இதற்கிடையே இந்த வயதான பெற்றோர்களுக்கு இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சீனாவின் விதிப்படி, இந்தக் குழந்தையின் டிஎன்ஏயும், தாத்தா பாட்டிகளின் டிஎன்ஏவும் தொடர்புடையதுதான் என்று நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே குழந்தையை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்பது அடுத்த கட்ட சோதனையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.