முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தராமையாவை தோற்கடித்தே தீருவேன்: குமாரசாமி சபதம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: நான் கிங்காகதான் இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்க மாட்டேன். எப்படியும் சித்தராமையாவை தோற்கடித்தே தீருவேன் என்று கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், கவுடாவின் மகனுமான குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. அமித் ஷாவும், ராகுல் காந்தியும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி கவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்றும் அந்த கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு குமாரசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராமநாகரா மற்றும் சென்னபட்டினத்தில் ஒரு மாதமாக சித்தராமையா பிரச்சாரம் செய்தாலும் ஒன்று நடக்காது. நாங்கள்தான் ஜெயிப்போம். எங்கள் கட்சிக்கு முடிவு கட்ட இந்த முறை அவரை தோற்கடித்தே தீருவோம். அவர் போட்டியிடும் சாமுண்டீஸ்வர் மற்றும் பாதாமி தொகுதிகளில் அவரை தோற்கடிப்போம் என்று குமாரசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து