முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.27 கோடி செலவில் கூடுதல் கட்டம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக காலை 11.00 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வந்த முதலமைச்சருக்கு விமான நிலையம் அருகே மாநிலஅம்மா பேரவை செயலாளரும்,வருவாய்த்துறை அமைச்சருமான  ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரசாதம் வழங்கி பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருக்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், பா.நீதிபதி, பெரியபுள்ளான் (எ)செல்வம், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், பஞ்சம்மாள், பஞ்சவர்ணம் பி.அய்யப்பன், மற்றும் கே.தமிழரசன், மா.இளங்கோவன், வக்கீல் திருப்பதி உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து