முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறியத் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

நேற்று காலை 10.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உரி பகுதியில் அமைந்துள்ள சௌகாஷ் என்னும் இடத்திற்கு எல்லை கட்டுபாட்டை மீறி நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் குர்ஷித் அகமத் என்னும் இந்திய ராணுவ வீரர் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். கழுத்து மற்றும் இரண்டு கால் பகுதிகளிலும் குண்டு அடி பட்டதால் சம்பவ இடத்திலேயே அகமத் உயிரிழந்துள்ளார்.  மரணம் அடைந்த குர்ஷித் அகமத் சென்னையின் 4 வது ராணுவ பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து