முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 210 மனுக்களை கலெக்டர் பல்லவி பல்தேவ் பெற்றுக்கொண்டார்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

  தேனி, -   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  .பல்லவி பல்தேவ்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  பொதுமக்களிடமிருந்து 210 பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,72,700 மதிப்பிலான  மானியத்தொகையினை வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
 பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்   உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 48 மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்கிட வங்கிக்கடன் மானியமாக ரூ.4,72,700 மதிப்பிலான மானியத்தொகையினையும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட 5 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதிய மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் பெண்கள் சுய வேலைவாய்ப்பினை உருவாக்கி அதன்மூலம் நிலையான வருவாய்யை ஈட்டிடும் வகையில் ரியல் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 40 நாட்கள் பயிற்சியாக அரசு ஊக்கத்தொகையுடன் தையல் பயிற்சி மற்றும் அழகுக்கலை பயிற்சி பெற்ற 40 நபர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்  வழங்கினார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  ச.கந்தசாமி  ட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து