முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜாகர்த்தா : தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 2004-ம் ஆண்டில் அங்குள்ள சுமத்ரா தீவு கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உட்பட 14 நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுமார் 2.8 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் மளுக்கு கடல் பகுதி யில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 ஆக பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதே போல பிலிப்பைன்ஸின் லுஸான் தீவு பகுதியிலும் நேற்று அதிகாலை 3.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.4 ஆகப் பதிவானது இந்த நில நடுக்கம் பிலிப்பைன்ஸின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. அடுத்தடுத்து லேசான நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து