முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மகால் அரசுக்கு சொந்தமானது வக்பு வாரியத்துக்கு அல்ல! மொகலாய மன்னர் வாரிசு கருத்து

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தாஜ்மகால் இந்திய அரசுக்கு சொந்தமானதே தவிர வக்பு வாரியத்திற்கு அல்ல என்று மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜபரின் கொள்ளுப்பேரனான யாகூப் ஹபீபுதீன் டுசி கூறியுள்ளார்.
 
தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டிய மன்னர் ஷாஜஹானுக்கு ஆக்ராவில் உருஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள மொகலாயர்களின் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜபரின் வாரிசுகளில் ஒருவரான யாகூப் ஹபீபுதீன் டுசி வந்திருந்தார். தான் வசிக்கும் ஐதராபாத் திரும்புவதற்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

வக்பு வாரியத்திற்கு தாஜ்மகால் சொந்தம் என்று மன்னர் ஷாஜஹான் எழுத்துமூலம் எதுவும் அளிக்கவில்லை. மொகலாயர்களின் நேரடி வாரிசாக நான் இருக்கிறேன். இதை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளேன். இதன் தீர்ப்பு எனக்கு சாதகமாக வெளியாகும்போது நான் தாஜ்மகாலை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பேன். தாஜ்மகால் இந்திய அரசின் சொத்தே தவிர, வக்பு வாரியத்திற்கு சொந்தமானது அல்ல. அதன் மீது எவரும் உரிமை கோர முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து