முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் கலவர வழக்கில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் விடுதலை

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அம்மாநில ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் வி.எச்.பி தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு அடுத்த நாள், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட 70 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்ற வாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹர்ஷ் தேவானி தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயா கோட்டானி மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 28 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதேசமயம் விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து