முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேடசந்தூரில் தாயும், மகளும் தூக்கு மாட்டி தற்கொலை

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - வேடசந்தூரில் குடும்ப தகராறில் தாயும், மகளும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள சேடபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரீரம்மாள்(35). இவர்களுக்கு ராஜதுரை(15) என்ற மகனும், ரஞ்சனி(14), ரஞ்சிதா(11) என்ற மகள்களும் உள்ளனர். ரஞ்சனி 9ம் வகுப்பும், ரஞ்சிதா 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாண்டிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் பாண்டி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
நேற்றுக்காலை பாண்டி வேலைக்கு சென்று விட்டார். ராஜதுரையும் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டார். வீட்டில் இருந்த வீரம்மாள் தனது 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி 3 பேர்களும் வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டனர். ரஞ்சனி தூக்கு மாட்டிய போது அவர் வலியால் சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். 3 பேரும் தூக்கு மாட்டிக் கொண்டதைப் பார்த்து அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வீரம்மாளும், ரஞ்சிதாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ரஞ்சனிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து