முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏலத்தில் கண்டுகொள்ளாத அணிகளுக்கு தனது அதிரடியால் பதில் கொடுத்த கிறிஸ் கெயில்!

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மொஹாலி: ஐ.பி.எல் ஏலத்தில் தன்னை நிராகரித்த அணிகளுக்கு ஆச்சரியம் அளித்திருக்கிறார் கிறிஸ் கெயில். ’சிங்கம் சிங்கம்தான்’ என்பதை நிரூபித்திருக்கிறது அவரது பேட்டிங் அம்சம்.

முன் வரதா அணிகள்....
இந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில் கெயிலை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. அவர் ஆடிய பெங்களூர் அணியும் கைவிட்டுவிட்டது. இரண்டாவது முறையாக அவர் ஏலத்துக்கு வந்தபோது, பஞ்சாப் அணியின் வீரேந்திர சேவாக் அவரை எடுத்தார். அவர் எடுக்கப்படாததற்கு மோசமான ஃபார்ம் காரணம் என்றும் ’வயதாகிவிட்டது, இனி என்னத்த அடிக்கப் போறார்?’ என்றும் கூறி வந்தனர். இப்போது அந்த விமர்சனங்களுக்கு அதிரடியால் பதில் சொல்லியிருக்கிறார் கிறிஸ் கெயில்.

11 சிக்ஸர்களுடன்...
மொஹாலியில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 58 பந்துகளில் சதமடித்து, மிரட்டியிருக்கிறார் கெயில். இதில் 11 சிக்ஸர்களும் அடங்கும். இவரின் அதிரடி காரணமாக வென்றிருக்கிறது பஞ்சாப் அணி. ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அர்ப்பணிப்போடு...
இந்த சதம் பற்றி கிறிஸ் கெயில் கூறும்போது, ‘உலகில், எந்த அணிக்காக நான் ஆடினாலும் அந்த அணிக்காக அர்ப்பணிப் போடுதான் விளையாடுகிறேன். உறுதியோடுதான் ஆடுகிறேன். கிறிஸ் கெயில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று பலர் கூறினார்கள். ஆனால், யாருக்கும் எதையும் நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

காப்பாறியிருக்கிறார்...
ஒரு பேட்டியில் வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘கிறிஸ் கெயில் 2 போட்டிகளை வெற்றிப்பெற்றுக்கொடுத்தால், நாங்கள் அவருக்கு கொடுத்த பணத்துக்கு அது சமமாகிவிடும்’ என்று கூறியிருப்பது பற்றி அவரிடம் பேச இருக்கிறேன். என்னை ஏலத்தில் எடுத்திருப்பதன் மூலம் ஐ.பி.எல்-லை காப்பாறியிருக்கிறார் சேவாக்.

சமர்ப்பிக்கிறேன்
இந்தப் போட்டியில் நூறு சதவிகிதம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறேன். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனது மகளுக்குப் பிறந்த நாள் (நேற்று ) . அவளுக்கு இந்த சதத்தை சமர்ப்பிக்கிறேன். அவளுடன் நேரத்தைச் செலவிட இருக்கிறேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து