எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: எண்ணூர் கடற்பகுதியில் கப்பல்கள் மோதலால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.131 கோடி நிவாரணத்தொகையை வழங்கும் நிகழ்வாக சென்னையில் நேற்று 21 மீனவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
இடைக்கால நிவாரணம்
எண்ணூர் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் எம்.டி.பி.டபிள்யூ மேப்பிள் சரக்கு கப்பல் மற்றும் டான் காஞ்சிபுரம் என்ற எண்ணெய்க் கப்பல் ஆகிய இரண்டு கப்பல்கள் கடந்த 28.1.2017 அன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதால் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் அதனைச் சார்ந்த கடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள், மீனவ மகளிர், மீன் விற்பனை செய்பவர்கள், மீன்பிடி சார்ந்த பிற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6.3.2017 அன்று பாதிக்கப்பட்ட 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம், மொத்தம் 15 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகையை வழங்கினார்.
ரூ.141 கோடி நிவாரணம்...
மேலும், கப்பல் நிறுவனங்களிடமிருந்து உரிய நிவாரணத் தொகை பெற்றிட, பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களிடம் இருந்து மீன்வளத்துறை வாயிலாக நிவாரணக் கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்டு, ஒருங்கிணைந்த அறிக்கை அளிக்கப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 448 மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட 131 கோடி ரூபாயும், மறுசீரமைப்பு பணிகளுக்காக 10 கோடி ரூபாயும், என மொத்தம் 141 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக கப்பல் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது.
7 வகையாக...
கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் தொழில் சார்ந்த முறையில் 7 வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் நிவாரணத் தொகையின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 35,000 ரூபாயும், இயந்திர மயமாக்கப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 20,000 ரூபாயும், இயந்திரமயமாக்கப்படாத நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 15,000 ரூபாயும், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தலா 12,000 ரூபாயும், மீன்பிடி உபதொழிலில் ஈடுபடும் மீனவ மகளிருக்கு தலா 10,000 ரூபாயும், மீன் விற்பனை செய்பவர்களுக்கு தலா 10,000 ரூபாயும், மீன்பிடித்தல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
21 மீனவர்களுக்கு...
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் விதமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், மீன்வளத் துறை இயக்குனர் ஜி.எஸ். சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
யார் யாருக்கு எவ்வளவு?
1) விசைப்படகு உரிமையாளர்கள் - தலா 35,000 ரூபாய்.
2) இயந்திர மயமாக்கப்பட்ட நாட்டுப்படகு - தலா ரூ.20,000.
3) இயந்திரமயமாக்கப்படாத நாட்டுப்படகு - தலா ரூ. 15,000.
4) மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் - தலா ரூ.12,000.
5) மீன்பிடி உபதொழிலில் ஈடுபடும் மீனவ மகளிர் - ரூ.10,000.
6) மீன் விற்பனை செய்பவர்கள் - தலா 10,000 ரூபாய்.
7) மீன்பிடித்தல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் - தலா ரூ.10,000.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.