எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17-வது லீக் ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.
17-வது லீக்...
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் 17-வது லீக் போட்டி புனேவில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்தில் இருந்து குணமடைந்த சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்பினார். முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட், குல்கர்னி நீக்கப்பட்டு கிளாசென், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர்.
ராஜஸ்தான் பீல்டிங்...
‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, சென்னை அணியின் ஷேன் வாட்சனும், அம்பதி ராயுடுவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் ஓவரிலேயே வாட்சன் வீழ்த்திருக்க வேண்டும். அவரது எளிதான கேட்சை ஸ்லிப்பில் நின்ற திரிபாதி நழுவவிட்டார். இந்த லைஃபை பயன்படுத்திக்கொண்ட வாட்சன், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அம்பதி ராயுடு 12 ரன்களில் ஆட்டம் இழக்கவும் ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா நுழைந்தார்.
ரெய்னா 46 ரன்கள்
இருவரும் அதிரடியாக விளையாடினர். 9.5 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை தொட்டது. 11.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 131 ரன்களாக இருந்த போது அதிரடி ரெய்னா 46 ரன்களில் அவுட்டானர். அவர், 29 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.
டோனி 5 ரன்களில்...
அடுத்து, கடந்த போட்டியில் விளாசியதைப் போல இந்தப் போட்டியிலும் விளாச வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தார் டோனி. ஆனால், அவர் முயற்சி கைகொடுக்கவில்லை. ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனியை பவுண்டரியில் அருமையாகப் பிடித்தார் கவுதம். அவர் 5 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, எதிர்முனையில் நின்று அசராமல் வாணவேடிக்கை நடத்தினார் வாட்சன். அவர், 57 பந்துகளில், 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இரண்டாவது சதம்...
இந்த தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இது. இதற்கு முன் பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் நேற்று முன்தினம் சதம் அடித்திருந்தார். ஷேன் வாட்சனுக்கு இது 3-வது ஐ.பி.எல். சதம். முன்பு ராஜஸ்தான் அணிக்காக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒரு சதம் சென்னைக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
205 ரன்கள் இலக்கு
டி-20 முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பிராவோ 24 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சுரேஷ் ரெய்னாவும் வாட்சனும் ஆடிக்கொண்டிருந்த போது அணியின் ஸ்கோர் 240-க்கு செல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் அருமையாக பந்துவீசி, சென்னையின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். அவர் 4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
140 ரன்களுக்கு அவுட்...
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கிளாசென் 7, சஞ்சு சாம்சன் 2, கேப்டன் ரஹானே 16, ஜோஸ் பட்லர் 22, திரிபாதி 5, பின்னி 10 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று 45 ரன் சேர்த்தும் பயனில்லை. சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீபக் சாஹர், தாகூர், கரண் ஷர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
சி.எஸ்.கே. முதலிடத்தில்...
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றி. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தானுக்கு 3-வது தோல்வி. சென்னை, தனது அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,