முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு: பாலஸ்தீனர்கள் 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்: காசா எல்லையில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது,
காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் உட்பட 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்தத்தைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது. காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து இம்மாத தொடக்கத்தில் பேரணியாகச் சென்றனர். அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின் பேரணி வன்முறையாக மாறியது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐ. நா.வின் விசாரணையை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் மீண்டும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து