எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும் என தம்பிதுரை எம்.பி கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வே மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த நேரத்தில், எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், அவருக்கு உரிய அரசு மரியாதையை வழங்கியது.
கடலில் கரைத்த பெருங்காயம்...
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தமிழகத்தை ஆளும் அ.தி. மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற, போராட்டங்களை தி.மு.க. திட்டமிட்டு நடத்தி வருகிறது. அவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்கள் அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் விரைவில் மறைந்துவிடும்.
மக்கள் முன்வரவில்லை.
காவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் இணக்கமான முடிவுகளை எடுத்துவரும்போது, கூட்டணி கட்சிகளின் துணையோடு போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை கலாச்சார விதைகளை தமிழகத்தில் தூவிவிடும் முயற்சியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. சுயநலங்களோடு தி.மு.க. நடத்துகிற போராட்டங்களை, தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான், போராட்டங்களுக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் முன்வரவில்லை.
கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அதில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள். அதற்காகத்தான் தமிழக அரசும் பொறுமை காக்கிறது. மக்கள் ஆதரவற்ற தி.மு.க.வின் போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய வண்ணம் இருக்கிறது.
இணைந்து இறுதி முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.
உறவை பிரிக்க முடியாது
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தம்பித்துரை மறுப்பு
ஆனால் இதனை துணை சபாநாயகர் தம்பி துரை மறுத்து உள்ளார். காவிரி விவகாரத்தில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும். பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்காதது ஏன்? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம்
18 Mar 2024சென்னை, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்காதது ஏன் ? என்பது குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.
-
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.