முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினார் வக்கீல் ராஜசேகரன்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இதன் கொள்கைகளையும், கொடியையும் மதுரை பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அன்றைய தினமே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டன.

இதில் முன்னாள் காவல் துறை அதிகாரி மவுரியா, அடையாறு மாணவர் நல உரிமையாளர் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் சேர உறுதுணையாக இருந்தவர் வழக்கறிஞர் ராஜசேகர். கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த 6 மாதங்களாக கட்சி உருவாவதற்காக பாடுபட்டேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. மேலும் கட்சியில் உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. என்னுடைய வழக்கறிஞர் தொழிலை சரியாக பார்க்க இயலவில்லை. இத்தகைய காரணங்களால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து