முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு பணியில் இருந்தபோது மரணம்: நெல்லை ராணுவவீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை உடனே வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் செல்வகுமாரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இரங்கல் - அனுதாபம்

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அஸ்ஸாம் மாநிலம், இடுலி மற்றும் கபாங் இடையேயான பகுதியில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, 20-வது மதராஸ் ரெஜிமெண்டில் ஹவில்தாராக பணிபுரிந்த செல்வகுமார், 22-ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.20 லட்சம் நிதியுதவி

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஹவில்தார் ஆர். செல்வகுமாரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து