முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராகவே முடியாது - விஜயகாந்த் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அவர் என்ன கருணாநிதியா என்று தே.மு.தி.க பொது செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

துதி பாட வேண்டுமா ?

காவிரி விவகாரம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், காவிரிக்கான அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் நான் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன். ஆனால் தி.மு.க சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே இருந்தது. அதுபோன்ற கூட்டங்களில் நானும் பங்கேற்று ஸ்டாலினின் துதி பாட வேண்டுமா ? அதற்கு ஸ்டாலின் என்ன கருணாநிதியா? 

முதல்வராக முடியாது

2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனால் தி.மு.க.வோ 40 தொகுதிகள் தர தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்னைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. இனி ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது. என்று தெரிவித்தார் விஜயகாந்த்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து