எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவர் கரி.இராமசாமி, மற்றும் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக் (சிங்காநல்லூர்) டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), உ.தனியரசு (காங்கேயம்), ஆர்.நடராஜ் (மயிலாப்பூர்), முனைவர்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), மாணிக்கம் (சோழவந்தான்) ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் துறை சார்ந்த கணக்குகள் குறித்து ஆய்வு மற்றும் தணிக்கை செய்தார்கள். மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன், சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவரும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கரி.இராமசாமி தலைமையிலான சட்டமன்ற குழு உறுப்பினர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் தற்போது முன்னேற்றத்திலுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து 24.04.2018 மற்றும் 25.04.2018 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு செய்வதற்காக வருகை தந்துள்ளார்கள். அதன்படி hமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் மண்டபம் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று இருமேனி ஊராட்சிக்குட்பட்ட குப்பானிவலசை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரணி மேம்பாட்டு பணிகளையும், ரூ.55 ஆயிரம் மதிப்பில் இவ்வூரணி கரையோரத்தில் பயன்பெறும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும், ரூ.1 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்கள்.
அதன்பிறகு பெருங்குளம் கிராமத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் உப்புநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், கழுகூரணி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாம்பாலம்மன் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும், சக்கரக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பாக ரூ.105.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் சீரமைப்பு பணிகளையும், மாடக்கொட்டான் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீரை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்வதற்காக செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் குழுவினர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் துறை சார்ந்த கணக்குகள் குறித்து ஆய்வு செய்தார்கள். குறிப்பாக வருவாய்த்துறையின் மூலம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அரசு நிலங்களை அரசிற்கு இழப்பீடு இல்லாத வகையில் குத்தகைக்கு விடுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் அமைத்தல் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மீன்பிடி தளங்களை விடுபடாமல் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அனைத்தும் முழுமையாக சரியான முறையில் செலவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தொழில்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, எரிசக்தித் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் பொது மற்றும் சமூக பிரிவுத் தணிக்கை, பொருளாதாரம் மற்றும் வருவாய் பிரிவுத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
மேற்குறிப்பிட்டுள்ள ஆய்வு மற்றும் தணிக்கை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமலினி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், கூடுதல் செயலாளர் லி.சு.வசந்திமலர், துணைச் செயலாளர் பி.தேன்மொழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.