முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாட்டு பணிகளை ஆணையாளர் அனீஷ்சேகர்ஆய்வு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை மாநகராட்சி சித்திரை திருவிழாவினை முன்னிட்டு மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான வைகை ஆற்று ஆழ்வார்புரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாநகராட்சியின் சார்பில் தற்காலிகமாக 16 இடங்களில் வைக்கப்பட உள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் குறித்தும், ஏற்கனவே உள்ள    9 குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகளிலும் தேவையான அளவு குடிநீரினை வழங்குமாறும், ஏற்கனவே உள்ள 8 கழிப்பறைகளையும், புதிதாக 8 இடங்களில் தற்காலிகமாக வைக்கப்பட உள்ள நடமாடும் கழிப்பறைகளிலும் சுத்தமாக பராமரிக்குமாறும், கழிப்பறைகள் அனைத்தும் இலவசமாக அனுமதிக்கப் படுகிறதா என மேற்பார்வை செய்யுமாறும்  சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் ஒபுளாபடித்துறை பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நான்கு சித்திரை வீதிகளில் உள்ள நவீன மின்னணு கழிப்பறைகள் மற்றும் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நடமாடும் கழிப்பறை களையும், தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்களையும் ஆய்வு செய்து கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்குமாறு கூறினார். மேலும் தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகளிலும் ஆய்வு செய்து தேவையான இடங்களில் சின்டெகஸ் குடிநீர் தொட்டிகளும், நடமாடும் கழிப்பறைகளையும் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி,  மேஷ்,  .கௌசலாம்பி;கை, மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், செயற்பொறியாளர்கள்  ராஜேந்திரன், சந்திரசேகர்,  சேகர், சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன்,  .நாகராஜ்,  ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து